posted 10th August 2026
Promotional Offer - உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
உண்மை வெளிவராமல் அமுக்குவது எது?
இந்தப் பகுதி சீரியலில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளும் பாடம்தான் என்ன? இதனால் நீ்ங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகின்றீர்கள்? இவ்வாறான துன்பங்களைத் துச்சமென மனதில் கொண்டு கடந்து செல்லுங்கள். மனதினை உற்சாகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை இது. கையினுள் இறுகப்பற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழுங்கள். எங்கள் வாழ்த்துக்கள்!
எமது இந்த Reel Review சனலினைப் பாருங்கள் – முழுவதுமாகப் பாருங்கள்.
தொடரும் சீரியல் றிவூ and analysisசினை தொடர்ந்து கேளுங்கள்.
நன்றி.
இன்று வரையிலான மூன்று முடிச்சு சீரியலிலே, கௌஷித்தின் ஆட்டம் அடக்கப்பட்டது. மாதங்கி, கௌஷித்திடம் பிச்சை கேட்டாள். சுரேக்காவிற்கு கௌஷித்தின் முகமானது ஞாபகத்திற்கு வந்தது. உடனே, அவனைக் காட்டிக் கொடுத்தாள் சுரேகா. அதனை உடனே தனது தாய் சுந்தரவள்ளியிடமே சொன்னாள். ஆனால், சுரேக்காவைக் கண்டு பிடிக்கும் முன்பு, சுந்தரவள்ளி வீட்டினிலே சுரேக்காவைக் கடத்தியவனோ அல்லது கடத்தியவளோ தன் கையிலே அகப்படட்டும் என்ன செய்கின்றேன் என்று போட்ட சபதம்தான் எங்கே. அத்துடன் மாதவி என்ன செய்தா? நந்தினி மீதான குற்றங்கள் நிவர்த்தியாக்கப்பட்டன. தான் நந்தினி மேலே அபாண்டமாகப் பழி முடித்ததனை எண்ணி நெஞ்சுருகி அழுதாள், சுரேக்கா. அதற்கான பரிகாரம் தான் செய்வேன் என்று முடிவெடுத்தாள் – அதனையும் செய்தாள், சுரேகா. மீண்டும் அருணாச்சலத்தின் வேண்டு கோளுக்கிணங்க சூரியா நந்தினியின் குடும்பத்துடன் தனது வீ்ட்டில் காலெடி எடுத்து வைத்தான்.
Moontru Mudichchu - மூன்று முடிச்சு - 08.08.2026
மாதங்கி தன்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று பிடிபட்டு அடி வாங்கித் தாங்க முடியாத நிலையினில் இருந்த கௌஷித்திடம் இப்போது இரங்கி நிற்கின்றாள். தான்தான் உலகத்திலேயே மிகவும் புத்திசாலி என்று கௌஷித்தை கேவலமாக்கின மாதங்கி இப்போது கௌஷித்தின் காலிலல்லவா விழுந்து விட்டாள்.
ஆனால், சுரேக்காவுக்கோ மாதங்கியின் முகம், அதாவது, தன்னைத் துன்புறுத்தியவளின் முகம் இடைக்கிடையே வந்து போகின்றது. கௌஷித்தும் முகத்திற்கு maskகினைப் போட்டுக் கொண்டுதானே அப்பப்போ சுரேக்காவை நாடினான். அப்படியிருந்தும் கௌஷித்தின் முகமானது சுரேக்காவிற்கு ஞாபகம் வந்ததுதானே!
சுரேக்காவிற்கு பழைய ஞாபகங்கள் வரத் தொடங்கி விட்டன. அதுமட்டுமல்லாமல், நல்ல இதயம் கொண்ட அண்ணியாக நந்தினியும் தன்னுடன் இருக்கின்றாள் என்றதானதினால், சுரேக்காவிற்கு யானையின் பலம் வந்திருக்கும் என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
ஊரார் முன்னிலையிலும் கௌஷித் தனது பிழைகளையும், றஞ்சித்தின் பிழைகளையும் ஒத்துக் கொண்டான். அப்படி இருக்கையிலே, சுந்தரவள்ளியும், மாதவியும் இன்னமும் நந்தினியின் மேலேயும், அவளது குடும்பத்தின் மேலேயும் காய்மகாரத்துடன்தான் இருக்கின்றார்கள் என்பதும் புலனாகின்றது.
கௌஷித்தை பொலிஸ் தங்களது custodyயில் எடுத்து விட்டது. ஆனால், சிறையினிலே றஞ்சித் தனது பணத்தினை வைத்து கௌஷித்தை தனது cellலினுள் எடுத்து விட்டான். இதனை பொலிஸ் உணரவில்லை, அதாவது, AC தனது instructionsகளை சரிவரக் கொடுக்கவில்லையோ அல்லது, ACயைத் தாண்டி இவை நடைபெறுகின்றதோ என்பதுதான் இப்போது குளப்பமாக இருக்கின்றது. ஆனால், ACயைத் தாண்டித்தான் இவ்வளவும் நடக்கின்றது என்பதானது ஊர்ஜிதமாகின்றது. ஏனென்றால், அவரிடம் நேர்மையும் இருப்பதினால்தான்.
இதனை, சுந்தரவள்ளி புனிதாவைக் கைது செய்யும்படி தனது செல்வாக்கினை வைத்து சொல்வதானது, இப்படித்தான், முன்னமும் நந்தினியைக் கைது செய்யும்படி இதே ACயிடம் சொல்லிச் செய்வித்தா. அதுமட்டுமல்லாமல், எப்படி புனிதாவைத் தண்டிக்க வேண்டும் என்று ஒரு கேவலமான ideaவை ACக்குக் கொடுக்கையிலே, அவர் மிகவும் கோபம் அடைந்தார். அத்துடன், இந்த முறையானது AC தனது பதவியின் பொறுப்பினை என்னவென்று சுந்தரவள்ளிக்கு அவவின் முகத்தில் அடித்தவிதமாக விளங்கப்படுத்தியும் விட்டார்.
சுந்தரவள்ளியின் கெடுபிடியினாலும், அருணாச்சலம் தனது புருஷன் என்று கூட ஒரு கணமும் சிந்திக்காமலும், மரியாதைக் குறைவாக அவர் வீட்டினிலும், வெளியிடத்திலும், பிள்ளைகள் முன்னாலும், பிறத்தியார் முன்னிலையிலும் அருணாச்சலம் கேவலப்படுத்தப் படுகின்றார். அதற்கு ஒரு முற்றுப் புள்ளியினை வைத்தாள் நந்தினி. அருணாச்சலம் சொல்லும்படி சுந்தரவள்ளி மனநிலையின் பாதிப்பில் உள்ளாவோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
ஒருவாறாக இவ்வளவு கஷ்டப்பட்டு நந்தினி ஒரு நிரபராதி என்று நிருபணமாகி இருக்கையிலே, சுந்தரவள்ளி இப்போது தனது அண்ணனின் மகள் ஹரித்தாவை நந்தினிதான் கொலை செய்துள்ளாள் என்று அடுத்த பழியினை நாக்குக் கூசாமல் சொல்லுவது எவ்வளவு தப்பானது என்றுகூட நினைக்காமல் சுந்தரவள்ளி சொல்லிக் கொண்டு அடுத்த அவதாரத்தினை ஆரம்பிக்கின்றா.
இவ்வளவு குற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் றஞ்சித், அதுமட்டுமல்லாமல் சுரேக்காவின் உயிர் நண்பியைக் கொலை செய்து விட்டு, இப்பவும் தனக்குத்தான் சுரேக்கா வாழ்க்கைத் துணவியாக வர வேண்டும் என்று மாதங்கியிடம் கூறுவதானது அசிங்கமாகத் தெரியவில்லையா? ஏனென்றால், குற்றம் செய்பவர்களுக்கு இப்படியாக behave பண்ணுவது ஜுயூப்பி போன்றது.
சுந்தரவள்ளியின் குடும்பத்தினுள்ளே, அருணாச்சலத்திற்கு உள்ள குணாதிசயங்கள் போன்றுதான் சூரியா. தாய் வளர்த்திருந்தாலும், இவ்வளவு துன்பங்களை அனுபவித்தவளாய் இப்போது தப்பி வந்திருக்கும் சுரேக்காவின் மனமும் தகப்பன், தணையன் போன்று நியாத்தினை உணரும் தன்மை கொண்டவள் என்பதனை நந்தினியை அண்ணி என்று கூப்பிடுவதனால் நிரூபி்த்து விட்டாள்.
இப்போது தாயுடன் சேர்ந்து முறுகிக் கொண்டு நிற்பவளாய் மாதவி இருக்கின்றாள். சுரேக்கா உண்மையினை நந்தியின் ஊரிலே வைத்து சொல்லுகையிலே, சுந்தரவள்ளிக்கோ அல்லது மாதவிக்கோ ஒருவிதமான கோப உணர்வுகள் வரவே இ்ல்லையே! இதைப் பார்க்கையிலே சுந்தரவள்ளியினதும், மாதவின் மனங்களோ சுரி நிரம்பிய பாளடைந்த கிணறு போன்றதற்கு ஒப்பாகும்.
றஞ்சி்த்தின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இருப்பது மாதங்கி மட்டும்தான். ஆனால், இப்போது சுரேக்காவும் நந்தினியினதும், சூரியாவின் பக்கமாக இருக்கின்றாள். அது மாதங்கிக்கு ஆபத்தானது என்று நினைக்கலாம். எனவே, மாதங்கிக்கு கூட்டினுள் போகும் காலம் நெருங்கி விட்டது என்றுதான் நினைக்க வாய்ப்புகள் உண்டு.
உண்மையானது மிகவும் உரமானதும், சக்தி வாய்ந்ததுமாகும். ஆனால், ஏன் உண்மை தாமதமாகின்றது? அப்போ உலகம் உண்மை இல்லையா?
ஆங்காரத்தில் வாழ்ந்தவள் ஹரித்தா. அவளின் முடிவானது அனைவருக்கும் தெரிந்ததே. ஹரித்தாதான் சுந்தரவள்ளிக்கு அச்சு அசலாக பிறந்துள்ளாள் என்பதில் ஒரு போலியான பகட்டு வேற இவர்களுக்கு.
சுந்தரவள்ளி தப்ப வேண்டுமென்றால், மாற்றம் ஒன்றுதான் அவசியமாகின்றது.
எமது Reel Review channel லினைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன என்பதனை Commentரினில் சொல்லுங்கள்.
எமது Reel Review channel லினில் இந்த சீரியலின் overall analysisஇனைச் செய்கின்றேன். இது முற்றுமாக எனது கருத்து என்பதனால், உங்களுக்கு ஏதாவது கூற விரும்பினால் கூறுங்கள். அத்துடன், எமது channelலினைப் பார்த்து ஆதரவு தரும் அனைவருக்கும், அத்துடன் இனிப் பார்க்கவுள்ள புது நேயர்கள் அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் தெரிவிக்கின்றேன். இன்றுதான் நீங்கள் எமது Reel Review channel லினை முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், அல்லது இன்னமும் நீங்கள் எமது channelலினை subscribe பண்ணவில்லை என்றால், subscribe பண்ணுங்கள், அத்துடன் like பண்ணி, share பண்ணுங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் Reel Review Channel இனில் சந்திக்கின்றேன்.
வணக்கம்!